கொள்கலன்களில் வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அர்ச்சுனா எம்.பி
கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
அர்ச்சுனாவின் கருத்து அடிப்படையற்றது மற்றும் தவறானது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
பாரிய சர்ச்சை
''அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை. அந்தக் கொள்கலன்களில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களே இருந்துள்ளன.
2009க்கு முன்னர் பிரபாகரன் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்'' இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
