லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள்
லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்றுவரும் குடியேற்ற போராட்டங்களை அடக்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு படைகளை களமிறக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1992ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரங்களுக்குப் பிறகு, குறித்த பாதுகாப்பு நகர்வை அமெரிக்க தலைவர் ஒருவர் மேற்கொண்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
குடியேற்ற சோதனைகள் தொடர்பில் ட்ரம்ப் விதித்த உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிராக தற்போது லொஸ் ஏஞ்சல்ஸில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.
இராணுவ போர் குழு
எனினும் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்காவின் 79ஆவது இராணுவ போர் குழுவின் உறுப்பினர்கள் தரையிறங்கியுள்ளமை போராட்டங்கள் வலுப்பெற வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.
குடியேற்ற திட்டத்துக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கிய போராட்டங்களைக் கலைக்க 2,000 தேசிய இராணுவ வீரர்களை அனுப்பும் குறிப்பாணையில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
பின்னணி
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சில ஊழியர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் 44 பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்நாட்டு பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன்திமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸார் கண்டித்தும் அரசுக்கு எதிராக முழக்க மிட்ட பேரணியாக சென்றுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்
இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றுள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வெளிநாடுகளை சேந்த 44 பேருக்கு ஆதரவாக நேற்று பொதுமக்களும் போராட்டத்தில் குதித்திருந்தனர்.
சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், வாகனங்களை தீவைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்தே லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
