நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை முழுமையாக ஏன் ராஜபக்சர்களின் தோள்களில் சுமத்த வேண்டும்..!

Protest Colombo Today Dollar Sri Lanka Economic Crisis
By Jenitha Apr 12, 2022 01:34 AM GMT
Report

 நாட்டின் தற்போதைய முழுமையான குழப்பத்திற்கான பழியை ராஜபக்ச தோள்களின் மீது ஏன் சுமத்த முடியும் என்பதை நினைவூட்டுவதற்கு இது ஒரு நல்ல தருணம்.

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நிச்சயமாக, கடன் நெருக்கடி இரண்டு தசாப்தங்களாக உருவாகி வருகிறது.

2015 முதல் 2019 வரையிலான குறுகிய நான்கு வருட காலப்பகுதிக்கு தலைமை தாங்கிய அடுத்தடுத்து வந்த, அரசாங்கங்கள், ராஜபக்சக்களின் அதிகப்படியான அரசாங்க செலவினங்களின் மூலம் தங்கள் பிரபலத்தை விரிவுபடுத்த முயன்றனர்.

மக்கள் விரும்பத்தகாத வரிவிதிப்பைக் காட்டிலும் கடனைப் பயன்படுத்துவதன் மூலம், நாடாளுமன்றத்தில் எத்தகைய பலவீனமான எதிர் வாதங்கள் எழுப்பப்பட்டாலும் அவற்றுக்கு மதிப்பளிக்காது செயற்பட்டன, உண்மையில் 2007 ஆம் ஆண்டு மஹிந்த தலைமையிலான அரசாங்கம் தான் முதன்முறையாக சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் கடன் வாங்கியது.

ராஜபக்சவின் வெள்ளை யானைகளை - கடனைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட திட்டங்கள் நாட்டுக்குத் திரும்பக் கிடைக்காததைக் கண்டுபிடிக்க வெகுதூரம் பார்க்க வேண்டியதில்லை.

தாமரை கோபுரம், கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வாழும் அனைவருக்குமான இந்த அடாவடித்தனத்தின் கலங்கரை விளக்கமாகும்.

மாகம் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு நிலையம், மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம், மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் தென் மாகாணத்தில் உள்ள எண்ணற்ற அகலமான நெடுஞ்சாலைகள் உறங்கும் மாடுகளுக்கு படுக்கையாக விளங்குகின்றன.

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராஜபக்ச ஆட்சியின் கீழ், அரச துறை வேலைவாய்ப்பு சுமார் 800,000 இலிருந்து 1.1 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களாக வளர்ந்தது, இராணுவம் உட்பட .

பாரிய நிதிப்பற்றாக்குறை இருந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களில் பொதுத்துறை வேலைவாய்ப்பை மேலும் அதிகரிப்பது பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நினைத்தார்.

பொதுத்துறை வேலைவாய்ப்பில் இப்போது இராணுவம் உட்பட 1.5 மில்லியன் மக்கள் உள்ளனர். பொதுத்துறையின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய மசோதா, அரசின் வருவாயில் 70% விழுகிறது.

2019 நவம்பரில் தேர்தலுக்குப் பிந்தைய வெற்றி, ராஜபக்ச நிர்வாகம் அதன் பொறுப்பற்ற தன்மையை கட்டுப்படுத்தாமல் 2019 இல் ஜனாதிபதி ராஜபக்சவின் பெரும் வரிக் குறைப்புக்கள், கூட்டாளிகளை திருப்திப்படுத்துவதற்கும் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கும் நிச்சயமாக எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.

டாக்டர். இந்திரஜித் குமாரசுவாமி டிசம்பர் 2019 இல் பதவி விலகினார், மேலும் ஜனாதிபதி கோட்டாபய டபிள்யூ.டி. லக்ஷ்மனை அந்தப் பதவிக்கு நியமித்தார்.

வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக வெளிநாட்டுக் கடனுக்கான அணுகல் இல்லாத நிலையில், அரசாங்கம் இப்போது மத்திய வங்கி, வணிக வங்கிகள், அரச வங்கிகள் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி போன்ற உள்நாட்டு கடன் வழங்குநர்கள் மீது கடன் வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.

பேராசிரியர் லக்ஷ்மனின் பதவிக்காலத்தில்தான் பரந்த பணம் 40% விரிவாக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டுக் கடன் 33% அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில், மத்திய வங்கியிலிருந்து அரசாங்கத்திற்கு நேரடியாகக் கடன் வழங்குவது 182% ஆக உயர்ந்துள்ளது.

பின்னர் 2021 செப்டம்பர் 15 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தனர். பணம் அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்காது, எமக்கு தேவையான அளவு டொலர் கிடைக்கும் மார்க்கங்கள் இருக்கின்றன. எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு சில அமைச்சர்களும் தேவையான அளவு பணம் இருப்பதாக மிகவும் உற்சாகமாக கூறினார்கள். நெடுஞ்சாலைகள் அமைப்போம் பாலங்கள் அமைப்போம் என்றும் கூறியிருந்தார்கள்.

வாகன இறக்குமதிக்கு தடை விதித்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவைப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை ஞாபகம் இருக்கின்றதா​?

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் கடந்த வருடத்தில், ஒரே இரவில் இரசாயன உரம் இறக்குமதிக்கு தடை விதித்தார்கள். சேதனப் பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி விவசாயிகளை வீதிக்கு கொண்டு வந்தார்கள்.

அது மாத்திரமன்றி அதிக விலை கொடுத்து இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்தார்கள். ஒரு பிடி உரம் கூட பெற்றுக்கொள்ளாமல் 6.9 மில்லியன் டொலர்களை சீனாவிற்கு வெறுமனே செலுத்தினார்கள்.

நாட்டின் தேசிய சொத்துகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அரச வங்கி ஒன்றையும் இக்கட்டான நிலைக்கு தள்ளினார்கள். இவை வெறுமனே நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் அல்ல. இவற்றுக்கு பின்னால் இவற்றை பங்கு பிரிப்பதற்காக நண்பர்கள் சிலரும் இருந்தனர்.

ஆட்சிக்கு வந்த உடனேயே, அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கின்ற பிரதான மார்க்கங்களில் ஒன்றான வரியை கட்டுப்படுத்தி 600 பில்லியனை இழந்தனர். பின்னர் நாட்டில் செலவழிப்பதற்கு பணம் இல்லாததால், பணத்தை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பணம் அச்சிடுவதை மத்திய வங்கியில் இருந்த உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் போன்றோர் ஏற்கவில்லை.

இதன் காரணமாக நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, சேவை வழங்கும் செலவுகளும் அதிகரிக்கும். அதாவது பணவீக்கம் அதிகரிக்கும் என்பதையே அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மக்களது தேவைகளுக்கு செவிசாய்க்காது, இவ்வாறான பல செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

இறுதியில் ஒரு வருட காலமாக 202 என்ற எல்லையில் இருந்த டொலரின் பெறுமதி அதிகரித்து, அந்நிய செலாவணியையும் தக்கவைக்க முடியாது போனது.

டொலரின் கேள்விக்கும் விற்பனைக்கும் இடம் வழங்குங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்புங்கள், கடனை மீளச் செலுத்த முடியாததால் கலந்துரையாடி அவற்றுக்கு கால அவகாசங்களை பெற்றுக்கொள்ளுங்கள், அல்லது இவற்றுக்கு மாற்றாக ஏதேனும் வியூகங்களை அமைத்துக்கொள்ளுங்கள் என பல நிபுணர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்ட எந்த ஒரு நபரும் இதனை பொருட்படுத்திக்கொள்ளவில்லை. இறுதியில், வெளிநாட்டு கையிருப்பு 1.5 பில்லியன் டொலர்களாக குறைவடைந்ததன் பின்னரே இவர்கள் அவதியுற்றனர்.

சீனாவிடம் மண்டியிட்டு 1.5 பில்லியன்களை பெற்று, தங்களுடைய கையிருப்பை உயர்த்திக் கொண்டாலும், தற்போது அதில் செலவழிப்பதற்கு டொலர்களாக மிஞ்சி இருக்கும் தொகை 1 பில்லியனை விட குறைவானதாகும்.

கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைவரும் கூறுகின்ற பின்புலத்தில், கடந்த ஜனவரி மாதம் 500 டொலர் மில்லியன்களை இறையாண்மை முறியாக மீள செலுத்தினார்கள்.

கழுத்து வரை பிரச்சினை நெருங்கியபோது, கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் டொலர் கைவிட்டுவிட்டது. கறுப்பு சந்தைகளில் டொலரின் பெறுமதி அதிகம் என்பதால், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட இலங்கை வங்கிகள் ஊடாக டொலர்களை அனுப்பி வைக்கவில்லை.

தற்போது என்ன நேர்ந்துள்ளது, ஒரு டொலரின் பெறுமதி 320 ரூபாவையும் விட அதிகரித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலரை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தாலும், தற்போதும் கறுப்பு சந்தையில் டொலர் ஒன்றின் பெறுமதி சுமார் 400 ரூபாவாகக் காணப்படுகின்றது.

60 வீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி பொருட்களின் விலையிலேயே தாக்கம் செலுத்தியுள்ளது. டொலர் இன்மை காரணமாக எண்ணெய், பால் மா, எரிவாயு போன்றவற்றை விநியோகிக்க எவரும் விரும்பவில்லை.

இறுதியில் துறைமுகத்திற்கு கப்பல் வரும் வரை காத்திருந்து, பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பல மாதங்களாக வரிசைகளில் காத்திருக்கின்றனர். மொத்தமாகவே நாடு வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தற்பொழுது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளார்.

நாட்டில் சீரான அமைச்சரவை ஒன்று இல்லை. மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. எதிர்காலத் திட்டம் ஒன்று இருப்பதாக தென்படவில்லை.

இவ்வாறான பின்புலத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று டொலர்களை பெற்று நாட்டை கட்டியெழுப்ப முடியுமா?

இந்த வருடத்திற்குள் 6.9 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது. எரிபொருள் கொண்டுவருவதற்காக மாத்திரம் ஒரு மாதத்திற்கு 300 மில்லியனை விட அதிகம் தேவைப்படுகின்றது.

மருந்து, உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதாக இருந்தால், அவற்றுக்கு டொலர் தேவை. இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டார்கள். மேலும் ஒன்றரை பில்லியன் கோரியிருக்கின்றார்கள்.

பங்களாதேஷிடமிருந்தும் 250 மில்லியன்களை பெற்றுக்கொண்டார்கள். அந்த கடனை செலுத்துவதை கால தாமதம் செய்து விட்டு, தற்பொழுது மேலும் 250 மில்லியன்களை கோரியுள்ளார்கள். பாகிஸ்தானிடமருந்து 200 மில்லியன் கோரினார்கள்.

சீனா மேலும் இரண்டரை பில்லியன் தருவதாகக் கூறி இருக்கின்றது. இந்த நாடுகள் எதிர்பார்ப்பின்றி கடன்களை வழங்காது. அதற்கு நிபந்தனைகள் இருக்கின்றன.

சீனாவிற்கு என்றால் தற்போதைக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்பன வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய மூன்று தீவுகள், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள், சம்பூரில் பாரிய நிலப்பரப்பு, சமுத்திர மீட்பு மத்திய நிலையம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறு தொடருமாக இருந்தால் நாளை இலங்கை என்ற நாடு இறைமை அற்ற அன்னிய நாடுகள் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு நாடா மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்நிலை தொடர்வதற்கு நாம் அனுமதிக்க போகிறமா? அல்லது எதிர்த்து தொடர்ந்து போராட போகிறமா?                

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US