இலங்கை துறைமுகத்தை நோக்கி படையெடுக்கும் கப்பல்கள்
செங்கடலில் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக கொழும்பு துறைமுகம் நோக்கி கப்பல்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் செயற்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தின் கேந்திர அமைப்பு காரணமாக மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவை நோக்கி இலகுவாக சென்றடைய முடியும் என துறைமுக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் நெரிசல்
தென்ஆபிரிக்காவை கடந்து செல்லும் கப்பல்கள் சந்திக்கும் முதலாவது துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பதனால் நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் கடந்த ஆண்டை விடவும் அதிகளவு கொள்கலன்கள் கையாளப்படும் என துறைமுக அதிகாரசபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஹவுதி போராளிகள் அமெரிக்க கப்பல் ஒன்றின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
