க்ளப் வசந்த படுகொலை! பச்சைக் குத்தும் நிலைய உரிமையாளருக்கு வந்த தொலைபேசி அழைப்பு

Sri Lanka Police Colombo Crime
By Benat Jan 01, 2025 02:49 AM GMT
Report
Courtesy: Benat Mary Mariyan

கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி இலங்கையை உலுக்கிய மிகக் கொடூர கொலை சம்பவம் தான் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம்.

அத்துருகிரிய பிரதேசத்தில், பச்சைக் குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவுக்காக தனது மனைவி சகிதம் சென்றிருந்த க்ளப் வசந்த அங்கு வந்த ஆயுததாரிகள் சிலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதன்போது, பிரபல பாடகி சுஜீவாவின் கணவரும் உயிரிழந்த நிலையில், பாடகி சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.

பேசுபொருளாக மாறிய விடயம்.. 

மேலும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து KPI என்று எழுதப்பட்ட தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்த சம்பவம், அதன் பின்னரான நாட்களில் இலங்கையில் பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக, பல சர்ச்சைகளை தோற்றுவித்த சம்பவமாகவும் க்ளப் வசந்த படுகொலை அமைந்தது.


க்ளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பச்சைக் குத்தும் நிலையத்தின் உரிமையாளர் அழுது புலம்பி கண்ணீர் விட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. எவ்வாறாயினும், பின்னர் அவரும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு முக்கியப் புள்ளி என தெரியவந்தது. அத்துடன் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், க்ளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற போதும் கூட பல அச்சுறுத்தல்கள் இருந்தது தொடர்பில் செய்திகள் வெளிவந்திருந்தன..


இந்தநிலையில், பல மாத சிகிச்சைகளுக்குப் பிறகு க்ளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன தனது கணவர் கொல்லப்பட்ட தினத்தன்று நடந்த விடயங்களை நேர்காணல் ஒன்றின் ஊடாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் விபரிக்கையில்,

“அன்று நடந்த சம்பவம் என்னை முற்றாக நிலைகுலைய வைத்தவிட்டது. அதனை மறக்க நினைத்தாலும் என் நினைவில் அந்த சம்பவம் மட்டுமே இருக்கின்றது.


என்னால் பல மாதங்கள் உறங்கமுடியவில்லை. எனக்கு பயமாக இருக்கும். அதனால் நான் கண்ணை மூடுவதில்லை. கண்ணை திறந்து வைத்துக் கொண்டு காத்திருப்பேன். உண்ணவும் முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலைக்கு நான் கொண்டு செல்லப்பட்ட போது எனது அருகிலேயே எனது கணவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. எனது ஒரு கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை.

எனது கணவர் என் அருகில் இருந்ததைக் கூட நான் அறியவில்லை. ஒன்றரை மாதங்களின் பின்னரே இதையும் கூறினர்” என்று கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டுள்ளார்...   

தொடர்புடைய செய்திகள்..

கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான புதிய தகவல் 

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த குறித்து அமைச்சர் டிரான் வெளியிட்ட தகவல் 

கிளப் வசந்த படுகொலை தொடர்பில் வெளியான புதிய தகவல்கள் 

கொழும்பை உலுக்கிய கிளப் வசந்த கொலை விவகாரம்: துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது 

கிளப் வசந்த கொலை விவகாரம்: மேலும் ஒருவர் கைது 

 கிளப் வசந்த கொலை விவகாரம்: மனைவி வெளியிட்ட தகவல்


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 01 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US