கிளப் வசந்த கொலை விவகாரம்: மனைவி வெளியிட்ட தகவல்
அத்துருகிரியவில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகி மனநல சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மேலும் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாடகி சுஜீவா மற்றும் பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவி, கிளப் வசந்தவின் மனைவி ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மனைவி வெளியிட்ட தகவல்
கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜயவர்தனவுக்கு மார்பிலும், கே.சுஜீவாவுக்கு காலிலும் துப்பாக்கிச் சூட்டுக்காயம் ஏற்பட்டதுடன், இருவரும் மிகவும் அதிர்ச்சியடைந்து மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கிளப் வசந்தவிற்கு என்ன நடந்தது என்பது முதல் நாளே தனக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவர் வேறொரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, அவரது உடல்நிலை குறித்து வைத்தியர்கள் தகவல் மறைத்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த அதிர்ச்சிக்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான அவர் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
