திருகோணமலை புறாத்தீவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நிலாவலி பொது கடற்கரை மற்றும் புறாத்தீவின் கீழ் நீர் சுத்தம் செய்யும் வேலை திட்டம் நேற்று (2) முன்னெடுக்கப்பட்டது.
ஜூன் 5 ஆம் திகதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றுச்சூழல் வாரம் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, மே 30 முதல் ஜூன் 05 வரை சுற்றுச்சூழல் வாரத்திற்காக தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
2025 ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் "பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்" என்ற உலகளாவிய கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு நிரந்தர தீர்வைக் கண்டறிவதற்கான இறுதி இலக்காக பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன, திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, தூய்மை இலங்கை செயலகத்தின் இயக்குநர்கள் கபில மற்றும் அஞ்சுலா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைகளத்தின் உதவி செயலாளர், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர், துறை அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு News Lankasri
