யாழ். நெல்லியடியில் மோதலில் ஈடுபட்ட 15 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்
யாழ். நெல்லியடி - இராஜ கிராமத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையிலான குறித்த மோதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் 15 பேரை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவி வரும் கோவிட் தொற்று அச்சம் காரணமாகவே சந்தேகநபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam