வெளிநாட்டில் பிள்ளையான் சகாக்களை தேடும் CID - இறுதிக் கட்டத்தில் பிள்ளையானின் விசாரணை
மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சி அலுவலகத்தில் வைத்து சிவனேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகா ஒருவரையும் சிஐடி கைது செய்திருந்தது.
இந்த கைதின் பின்னர், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன் வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில், தற்போது உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளின் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது தொடர்பில் பல அறியப்படாத விடயங்களையும், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...,

செம்மணி குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! தகவலறிந்தவரை பின்தொடரும் புலனாய்வுப்பிரிவு

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
