மொசாட்டில் இந்தியர்கள்! இரகசியமாக தரையிரங்கிய சீனாவின் இராணுவ விமானங்கள்
இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட்டிற்காக உளவு பார்த்ததற்காக ஈரானில் பல இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரானில் 73 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், ஈரான், இஸ்ரேல் மற்றும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளின் சமூக ஊடகக் கணக்குகளில் இது தொடர்பில் எவ்விதமான கருத்துக்களும் பதிவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஈரானிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தின் ஒரு ஊடக அறிக்கையில் உளவாளிகள கைது செய்து தூக்கிலிட்டதாகக் கூறியுள்ளது.
ஆனால் அந்த உளவாளிகளில் எவரும் இந்தியர் என்று குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் இஸ்ரேல் ஈரானின் பதற்றங்கள் மத்தியக்கிழக்கை அதிரவைத்துள்ள பின்னணியில் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட உளவாளிகள் யார்? அவர்கள் எந்த நோக்கத்திற்கான ஈரானுக்குள் நுழைந்தனர், உண்மையில் இவர்கள் மொசாடால் நகர்த்தப்படும் காய்களா? என்பதை பிரித்தானியாவில் (Britain) இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி மூலம் பின்வருமாறு விளக்கியுள்ளார்...