இஸ்ரேல் - ஈரான் தாக்குதலை நிறுத்த முன்வந்த புடினிடம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேட்ட உதவி
மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்த மோதல் நிலை காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகின்ற நிலையில், இரு நாடுகளும் எவ்வித விட்டுக் கொடுப்புக்களும் இன்றி சரிக்குச் சமமாக மோதிக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேல் - ஈரான் மோதல்
இந்த மோதல் நிலை சர்வதேசத்தில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க உலகின் பலம்பொருந்திய நாடுகளான அமெரிக்கா - ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் இஸ்ரேல், ஈரான் மோதல் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
அப்போது இந்த இஸ்ரேல் - ஈரான் மோதல் நிலை தொடர்பில் மத்தியஸ்தம் செய்ய தான் தயார் என்று புடின், ட்ரம்பிடம் கூறியுள்ளார்.
ஆனால், அதனை மறுத்த ட்ரம்ப், முதலில் உங்களது பிரச்சினையை மத்தியஸ்தம் செய்து நிறைவுறுத்துங்கள், அதன் பின்னர் இஸ்ரேல் - ஈரான் பிரச்சினைக்கு வருத்தப்படலாம் என தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தானே முன்வந்து செய்தியாளர்களிடமும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து, ரஷ்ய தலைவர் புடின் தரப்பு விளக்கம் கொடுத்த, ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், இந்த தொலைபேசி உரையாடல் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது என்றும், ஆனால் ட்ரம்ப் கூறும் செய்தி தற்போது நடந்த ஒன்று போல காட்டப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முரண்பாடான கருத்து காரணமாக, இதுபோன்றதொரு தொலைபேசி உரையாடல் உண்மையில் நிகழ்ந்ததா என்ற சந்தேகம் சர்வதேசத்தில் எழுந்துள்ளது.

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam
