கொழும்பில் சீன பிரஜை செய்த மோசமான செயல்: 4,000க்கும் மேற்பட்ட சீனர்கள் உடந்தை..!
கொழும்பு போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரின் முதலீட்டாளராக தம்மைக் காட்டிக் கொண்டு சர்வதேச அளவிலான பிரமிட் மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு-தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பொரளை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடியில் 4,000க்கும் மேற்பட்ட சீனர்கள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட நபர்
மேலும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட நிதியைச் சீனாவுக்கு மாற்ற உண்டியல் முறை பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன நாட்டவர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு 100 அல்லது 200 அமெரிக்க டொலர்கள் வைப்புத்தொகைக்கு ஈடாக பலன்களை வாக்குறுதியளித்துள்ளார்.
எனினும் அவர் அந்த சலுகைகளைச் செலுத்தாமல் சுமார் 10,000 அமெரிக்க டொலர்களை
வைப்பாகப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri