யாழ்ப்பாணத்தில் இன்று வெடிக்க போகும் மாபெரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தையிட்டி - திஸ்ஸ விகாரை முன்றலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி" என்ற தொனியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதற்கான அழைப்பு துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த போராட்டம்..
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையால் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தாக்கப்பட்டதுடன் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அங்கிருந்து சென்றாலேயே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேலன் சுவாமிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று மீண்டும் சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan