இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகு! 39 பேர் மாயம்
39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீன மீன்பிடிக் கப்பல் விபத்தில் காணாமல்போனவர்களை தேட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய இந்தியப் பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 என்ற சீன மீன்பிடி கப்பலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
39 பேர் மாயம்
குறித்த கப்பலில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே காணாமல் போயுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் கெப்டவுனிலிருந்து புறப்பட்ட இந்த மீன்பிடி கப்பல், மாலைதீவுக்கு தெற்கு திசையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
கப்பல் சீன நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியா, இலங்கை, மாலைதீவு, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
