இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்: வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய வாய்வழி சுகாதார அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், அதே வயதுடைய குழந்தைகளில் சுமார் 63 சதவீதம் பேர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குழந்தைகளை பல் மருத்துவமனைகளுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாய் ஆரோக்கியத்தின் வீழ்ச்சி
கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் பல் மருத்துவமனைகள் மூடப்பட்டமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை ஆகியவை குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக மருத்துவர் சேனநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் வாய் சுகாதாரத்தை பராமரிப்பதில் பெற்றோரின் அலட்சியமும் குழந்தைகளின் வாய் ஆரோக்கியம் குறைவதற்கு பங்களித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
மேலும் குழந்தைகள் ஒரு வருடமாக இருக்கும் போது தோன்றும் புதிய பால் பற்கள், அவர்களுக்கு வயது வந்தோருக்கான பற்கள் தோன்றும் வரை, அவற்றை பாதுகாக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri