இலங்கையில் பல் சொத்தையால் பாதிக்கப்படும் சிறுவர்கள்: வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர் சம்பா சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய வாய்வழி சுகாதார அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், அதே வயதுடைய குழந்தைகளில் சுமார் 63 சதவீதம் பேர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குழந்தைகளை பல் மருத்துவமனைகளுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாய் ஆரோக்கியத்தின் வீழ்ச்சி
கோவிட் தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் பல் மருத்துவமனைகள் மூடப்பட்டமை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை ஆகியவை குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக மருத்துவர் சேனநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் வாய் சுகாதாரத்தை பராமரிப்பதில் பெற்றோரின் அலட்சியமும் குழந்தைகளின் வாய் ஆரோக்கியம் குறைவதற்கு பங்களித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
மேலும் குழந்தைகள் ஒரு வருடமாக இருக்கும் போது தோன்றும் புதிய பால் பற்கள், அவர்களுக்கு வயது வந்தோருக்கான பற்கள் தோன்றும் வரை, அவற்றை பாதுகாக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
