புதுக்குடியிருப்பில் ஒரு வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்
புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று (19) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் தவறி வீழ்ந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைவேலிப்பகுதியனை சேர்ந்த சியோன்ஷன் என்ற 1 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர்கேனில் விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ
இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்
குழந்தையின் உடல் மரணவிசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
