இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நாடு முழுவதும் வேகமாக பரவும் நோய்த்தொற்று
நாட்டில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சிக்குன்குனியா வைரஸ் நோய் இலங்கை முழுவதும் பரவி வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.
இந்த சிக்குன்குனியா நோய்த்தொற்று இலங்கை முழுவதும் பரவலாகப் பரவி வருவதாகவும், தற்போதைய வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பரையின் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வேகமாக பரவி வரும் நோய்த்தொற்று
தற்போது வேகமாக பரவி வரும் இந்த நோய்த்தொற்று தொடர்பில் நாட்டின் சுகாதாரத் துறை மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனப்புர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆராய்ச்சிப் பிரிவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த வைரஸ் இந்தியப் பெருங்கடல் பரம்பரையின் பல தனித்துவமான பிறழ்வுகளுடன் நிகழ்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இலங்கையில் சிக்குன்குனியாவின் தொற்றுநோய் பரவி வருவதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பரவி வரும் சிக்குன்குனியா திரிபு தனித்துவமான பிறழ்வுகளைக் காட்டுகிறது என்றும், கட்டமைப்பு அல்லாத மேலும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri