பெருந்தொகை பணத்துடன் வீதியில் கிடந்த பை! பாடசாலை மாணவியின் நெகிழ்ச்சியான செயற்பாடு
வீதியில் விழுந்து கிடந்த 17,000 ரூபாய் பணத்துடன் இருந்த பையை பாடசாலை மாணவியொருவர் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பொலன்னறுவை- கிரிதலேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பொலன்நறுவை கிரிதலேகம மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று முடித்த மாணவியொருவர் பாடசாலைக்கு சென்ற பொழுது வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்துள்ளார்.
தமிழரசு கட்சிக்கு ஏனைய கட்சிகளோடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிர்பந்தம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
பாராட்டு
இதனையடுத்து, குறித்த மாணவி பணப்பையை பாடசாலை அதிபரிடம் கொடுத்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.
இந்தநிலையில், அதிபர் குறித்த தகவலை முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்த 75 வயதுடைய முதியவர் அதிபரிடம் தனது பணப்பையை பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, தனது பணப்பையை பெற்றுக்கொடுத்த பாடசாலை சமூகத்தினருக்கும், மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் முதியவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan