தொடரும் மத்திய கிழக்கு பதற்றம் : தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமான நிலையம்
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது,
இதேவேளை தாக்குதல் நடந்த விமான நிலையத்தில் பல விமானங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த
தாக்குதலைத் தொடர்ந்து ஒரு பெரிய புகை மேகம் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பல இடங்கள் எதிரிகளால் குறிவைக்கப்பட்டிருப்பதை ஈரானிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் முன்னதாக மார்ச் 4 ஆம் திகதி விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது, ஹெலிகொப்டர் உற்பத்தி பிரிவு உட்பட இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல அமைப்புகளை அழித்தது.
இருப்பினும், காலை இடம்பெற்ற தாக்குதலில் விமான நிலையத்தின் எந்த இடங்கள் பாதிக்கப்பட்டன என்பது இன்னும் தகவல்கள் வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 16 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri