ஈரான் குறித்து இஸ்ரேலின் உத்தியோகபூர்வ அறிவிப்பு - மக்களுக்கு இராணுவத்தின் அவசர அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் மோதல் நிலைமை நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஈரான் தனது புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மீது ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறபதிப்படுத்தியுள்ளது.
அவற்றை இடைமறித்து அழிப்பதற்கான வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் தற்போது செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
இதேவேளை பாதுகாப்பு கட்டமைப்புகள் இயங்கி வருகின்றதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri