பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா தொற்று
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 06 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இன்றையதினம்(9) பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
06 பேருக்கு சிக்குன்குனியா
இதனை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 ஊழியர்களும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளால் (09) அன்று குறித்த பகுதி முழுவதும் புகை விசிறல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
