கசிப்பு மற்றும் மதுபான வியாபாரம்: தாயும் மகளும் கைது
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்ட பத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் அரச மதுபானங்களை விற்பனையில் ஈடுபட்டு வந்த தாயையும் மகளையும் கைது செய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த பகுதியிலுள்ள அருகருகே உள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டனர்.
இதன் போது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அருகிலுள்ள வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அரச மதுபானங்களைச் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை 10 கால் போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் தாயும் மகளும் எனவும் இவர்களை நீதிமன்றில்
முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan