கிழக்கில் மனித புதைகுழி.. செம்மணியைத் தொடர்ந்து இப்போது சம்பூர்!

Missing Persons Sri Lankan Tamils Trincomalee Eastern Province chemmani mass graves jaffna
By Independent Writer Jul 21, 2025 09:34 AM GMT
Independent Writer

Independent Writer

in பாதுகாப்பு
Report

நேற்றைய தினம் திருகோணமலை - சம்பூர் பகுதியில் மனிதப் புதைகுழி என சந்தேகப்படும் இடம் ஒன்று கண்டறியப்பட்டது. 

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக, ஓய்விற்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று 21.07.2025 ஆரம்பிக்கப்படவிருந்தன. 

அதற்கிடையில், திருகோணமலை - சம்பூர் கடற்கரையை அண்டிய பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித மண்டையோடு உள்ளிட்ட சில மனித எலும்புத் தொகுதிகள், மனித எச்சங்கள் வெளிவந்தததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டது.

காதலனின் உயிரை காப்பாற்றிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

காதலனின் உயிரை காப்பாற்றிய காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

மனிதப் பேரவலங்கள் 

இச்சம்பவம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் நடந்த மனிதப் பேரவலங்களான மனிதப் படுகொலைகளின் வரிசையில் கிழக்கில் சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் பயங்கரத்தையும், அதன் நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளதோடு அதற்கு நீதி கிடைக்குமா எனும் ஏக்கத்தையும் உண்டாக்கியிருக்கிறது.


கடந்த வியாழக்கிழமை (2025.07. 17) மூதூர் - சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணியைத் தொடர்ந்தது.

கிழக்கில் மனித புதைகுழி.. செம்மணியைத் தொடர்ந்து இப்போது சம்பூர்! | Chemmani Mass Graves Jaffna Sampur Trinco  

இதன்போது 2025.07.20 ஞாயிறு குறித்த பகுதியில் மனித மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. 

பின்னர், பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு அது நீதிபதிக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டார்.

யாழில் சோகம் : காற்பந்து விளையாடியவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் சோகம் : காற்பந்து விளையாடியவருக்கு நேர்ந்த துயரம்

கண்ணிவெடி அகழ்வு   

அத்தோடு அப்பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு, அப்பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (2025.07.23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரைக் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கில் மனித புதைகுழி.. செம்மணியைத் தொடர்ந்து இப்போது சம்பூர்! | Chemmani Mass Graves Jaffna Sampur Trinco

குறித்த அகழ்வுப் பணியின் போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அண்மித்த பகுதியிலிருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கில் இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படைகளும் இணைந்து அரசின் திட்டமிடலுடன் நடத்தப்பட்ட படுகொலைகளாகக் கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் உடும்பன்குளம், திராய்க்கேணி, வீரமுனை உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு,சத்துருக்கொண்டான், சித்தாண்டிப் படுகொலைகள் போன்ற மிகக் கொடிய படுகொலை நடந்த இடமே இந்த சம்பூர்ப் படுகொலையாகும்.

திருகோணமலை - சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது.

கிழக்கில் மனித புதைகுழி.. செம்மணியைத் தொடர்ந்து இப்போது சம்பூர்! | Chemmani Mass Graves Jaffna Sampur Trinco

குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1990 07.07ஆம் திகதி இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர் கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும், காணிகளும் கூட சூறையாடப்பட்டன. இவ்வாறான பெரும் துன்பங்களை அனுபவித்த அந்த மக்களின் உயிரிழந்த உறவுகளின் உடல்கள் மீட்கப்படாமலும், முறையாக அடையாளம் காணப்படாமலும், உரிய முறையில் அல்லாமல் புதைக்கப்பட்டும் இருந்தது.

இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த மக்களால் அங்கு அஞ்சலிகள் செய்யப்படுவதோடு நீதிக்கான குரல் தொடர்ந்தும் ஒலித்து வந்தது. இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் அந்தப் பகுதி மக்களின் நீதி மற்றும் உண்மைக்கான தேடலுக்கு மேலும் நல்ல நம்பிக்கையும் வலுவும் சேர்த்துள்ளது என பலரால் தெரிவிக்கப்படுகின்றது. 

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

செம்மணி மனிதப் புதைகுழியில் மீண்டும் இன்று முதல் அகழ்வு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US