“எனது குடியுரிமைகளை பறிக்க முயற்சிக்கின்றனர்”- சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக தம்மை தண்டிக்கவும் அவரது குடியுரிமைகளை பறிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளனர்.
இந்தநிலையில் முன்னைய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவே இந்த புதிய ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது, தங்களின் குடியுரிமைகளை பறிப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாக ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரசியல் பாதிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு மின்சாரம் இல்லை, குழந்தைகளுக்கு பால்மா இல்லை, உழைக்கும் மக்களுக்கு உணவைப் பெற்றுக்கொள்ள வழி இல்லை,
விவசாயிகளுக்கு உரம் இல்லை, மக்களுக்கு அரிசியை பெற்றுக்கொள்ள வழி இல்லை
அத்துடன் 2010க்குப் பிறகு நடந்த மோசடியின் விளைவாக மிகப்பெரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam