மத்திய வங்கி ஊழியர்களுக்கு வரலாற்றில் அதிகூடிய சம்பளம் : கோடிக் கணக்கில் நட்டம்
இலங்கை மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு வரலாற்றிலேயே அதிகூடிய சம்பளத்தை அண்மையில் வழங்கியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக 2 வருடங்களாக மத்திய வங்கி கோடிக்கணக்கில் நட்டத்தினை சந்தித்துள்ள நிலையில், இவ்வாறு வரலாறு காணாத சம்பள அதிகரிப்பை மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல கோடி நட்டமும் சம்பள அதிகரிப்பும்
இன்றையதினம்(06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் நிகர நட்டம் 114 பில்லியன் ரூபாவாகும். 2022ஆம் ஆண்டில் நிகர நட்டம் 374 பில்லியன் ரூபாவாகும்.
எந்தவொரு நிறுவனமும் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்தால், அந்த நிறுவன ஊழியர்களின் சலுகைகள் வெட்டப்படும். போனஸ் நிறுத்தப்படும். ஊதியம் நிறுத்தப்படும்.
ஆனால் இலங்கையின் வரலாற்றில் மிக அதிக சம்பள அதிகரிப்பை இந்த நிறுவனம் பல வருடங்களாக பலகோடி நட்டத்தில் இருக்கும் நிலையில் மத்திய வங்கி வழங்குகின்றது.
மேலும், இலாபம் ஈட்டினாலும், மத்திய வங்கியிடம் பொதுப் பணம் உள்ளது. மத்திய வங்கி இலாபம் ஈட்டும் முதல் வழி அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் கடன் கொடுத்து வட்டி வருமானத்தைப் பெறுவது. பணத்தை வடிவமைக்கும் ஏகபோகத்தை மத்திய வங்கி கொண்டிருப்பதால், இதுபோன்ற கடன்களை வழங்க முடிந்தது.
மேலும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பின் நிர்வாகத்திலிருந்து பெறப்படும் இலாபமும் மத்திய வங்கியின் வருமானமாகும்.
அதாவது பொதுப் பணம் மத்திய வங்கியில் உள்ளது. எனவே, பொது நிதியில் இருந்து தங்களுக்கு ஆதரவில்லை என்று பொய் கூறி நாட்டை ஏமாற்றி சம்பளத்தை அதிகரித்து நட்டத்தை ஏற்படுத்தியதற்காக மத்திய வங்கியின் ஆளுநரும், ஆளுனர் சபையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
