அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்! இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை
இந்திய துறைமுகமான விழிஞ்சத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டபோது, கப்பல் இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடல் சீற்றம்
தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கப்பலில் உள்ள ஆபத்தான பொருட்கள் குறித்து இந்திய கடலோர காவல்படை ஒரு அறிக்கையை வெளியிட்டு, கரையில் கரையொதுங்கியிருக்கக்கூடிய ஏதேனும் கொள்கலன்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு இந்திய பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.

அதன்படி, கேரளா முழுவதும் கடலோரப் பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் கடலோர காவல்துறை அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், கரையில் ஒதுங்கக்கூடிய அடையாளம் தெரியாத பொருட்களை அணுக வேண்டாம் என்றும் எச்சரிக்கைகளை வெளியிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri