ஏமன் கடலில் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: சோமாலியக் கொள்ளையர்களின் பிடியில் எம்.டி ஆசானா
ஏமன் நாட்டின் ஏடன் வளைகுடாவில் பயணித்த 'எம்.டி ஆசானா' (MT Asana) என்ற எரிபொருள் மற்றும் இரசாயனப் பொருள் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
தன்சானியக் கொடியுடன் பயணித்த இந்த கப்பல், தற்போது சோமாலியக் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் ஜெர்மனியைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 10 பேர் உட்பட மொத்தம் 20 பணியாளர்கள் உள்ளனர்.
அச்சுறுத்தல்
கப்பலில் உள்ள கொள்ளையர்களுக்குச் சிறிய படகுகள் மூலம் உணவுகள் கொண்டு செல்லப்படுவதை உள்ளூர்வாசிகள் நேரில் கண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக 'கடல்சார் கடத்தல்' என ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைப் பிரிவு (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2008 முதல் 2018 வரை தீவிரமாக இருந்த சோமாலியக் கொள்ளையர்களின் அச்சுறுத்தல், 2023க்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam