கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மற்றுமொரு விபத்து
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-அல நுழைவாயிலில் இன்று பிற்பகல் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நெடுஞ்சாலையில் இருந்து ஜாஎல நோக்கி பயணித்த கார் வீதியின் நடுவில் உள்ள தடையில் மோதி சுமார் 20 மீற்றர் தூரம் உருண்டு சென்றுள்ளதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் கடந்த காலங்களில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சுமார் பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |