வவுனியாவில் விபத்து : காருடன் சாரதி தப்பியோட்டம்
வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய கார் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது வவுனியா - வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று (04.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வவுனியா நகரில் இருந்து தொடருந்து நிலைய வீதி ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன், தப்பிச் சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் சிசீரீவி காணொளி உதவியுடன் வவுனியா பொலிஸார் தேடி வருகின்றனர்.

நிரந்த சேமிப்புக்களுக்கான வட்டி குறைப்பு! மே மாதத்தின் பின்னர் ரணில் வெளியிடவுள்ள மிக முக்கிய அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam