ஈரானின் இராணுவப்படையை பயங்கரவாத குழுவாக அடையாளப்படுத்தும் கனடா
ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான ஈரானிய புரட்சி இராணுவத்தை (IRGC) பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா (Canada) தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய எதிர்க்கட்சி மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோரால் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய அரசாங்கம்
மேலும், கனேடிய பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை ஈரானில் இருந்து விலக்கிக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக, ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட மற்றும் புரட்சிப் படையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கனடாவுக்குச் செல்லவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |