அடர்ந்த காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்ட தாய் மற்றும் மகள்: விசாரணையில் வெளியான தகவல்
பேராதனை, போவல பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாரியளவிலான கசிப்பு காய்ச்சிவந்த தாய் மற்றும் மகளை கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளது.
இதன்போது 200 கசிப்பு போத்தல்கள் மற்றும் 1250 லீற்றர் கோடாவுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 48 வயதுடைய தாயும் அவரது 26 வயது மகளும் கசிப்பு கடத்தல் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
பொலிஸார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதால் பேராதனை போவல பேருந்து வீதியில் இருந்து சுமார் 1 1/2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சல்களை நடத்தி வந்துள்ளனர்.
கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவின் மேற்பார்வையில் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
