எதற்கு முன்னுரிமை? கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு
நமது இராணுவம் திறம்பட செயல்பட, நமது உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனேடிய பெண்ணான அனிதா ஆனந்த் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் முன்னுரிமை வழங்கவுள்ள விடயங்கள் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,
அனைத்து கனேடிய விமானப்படை உறுப்பினர்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் உணர்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு தேவைப்படும் போது அவர்களுக்கு தேவையான ஆதரவை பெறுவதையும், நீதிக்கான கட்டமைப்புகள் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துவதே எனது முதன்மையான முன்னுரிமை.
இராணுவத்தில் தவறான நடத்தை என்பது ஒரு பெண்ணின் பிரச்சினை மட்டுமல்ல.
நமது இராணுவம் திறம்பட செயல்பட, நமது உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், அவர்கள் பாதுகாப்பாக உணர வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.
இந்த நெருக்கடியை சரிசெய்வதே எனது முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
செய்திகளின் தொகுப்பு...
கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!
கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்! மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri