கனடாவில் முதன்முறையாக இராணுவ தளபதியாக பெண் ஒருவர் நியமனம்
கனடா (Canada) முதன்முறையாக பெண் ஒருவரை நாட்டின் உயர் இராணுவ அதிகாரியாக நியமித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய ஆயுதப்படைகளில் பாலியல் மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முன்னணியில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னன் (Jennie Carignan) என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அழுத்தம்
அவர், ஜூலை 18 அன்று பாதுகாப்பு ஊழியர்களின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
இது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜென்னி கரிக்னன், அவரது தொழில் வாழ்க்கையில், அவரது தலைமைத்துவ குணங்கள், சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை நமது ஆயுதப்படைகளுக்கு மிகப்பாரிய சொத்தாக இருந்தன" என்று கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க கனடா சர்வதேச அழுத்தத்தை எதிர்கொள்வதால், ஒரு முக்கியமான கட்டத்தில் கரிக்னன் தலைமை ஏற்கிறார்.
2018ஆம் ஆண்டில், ராயல் கனேடியன் மவுண்டட் காவல்துறையின் முதல் பெண் தலைவராக பிரெண்டா லக்கியை ட்ரூடோ நியமித்தார்.

மேலும், பிரிட்டிஷ் முடியாட்சியின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாக பணியாற்றும் கடைசி இரண்டு கவர்னர் ஜெனரல்களும் பெண்களாக இருந்ததோடு, இருவரும் கனேடிய பிரதமரால் பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam