கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கார் - சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உரிமையாளர் இன்றி பல வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த கார் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் SPKM- 8179 Nissan Bluebird கார் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
மர்ம கார்
இந்த கார் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த வெலேகே மாயா சுதேசிகா என்ற பெண்ணுக்கு சொந்தமானதாகும்.
தற்போது பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றுடன் குறித்த கார் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மதியம் 12.30 மணியளவில் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது சர்ச்சைக்குரிய காரை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
