தென்னிலங்கையில் உணவகத்திற்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் நடத்திய மர்ம நபர்கள்
அஹங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் அஹங்கம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றைய நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam