கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த சகோதரன் மற்றும் சகோதரி
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளளது.
இன்று பிற்பகல் கட்டுபெத்த பிரதேசத்தில் குப்பை லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சகோதரன் மற்றும் சகோதரி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பண்டாரகம, அழுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபர் மற்றும் அவரது 55 வயதானவர்களே உயிரிந்துள்ளனர்.
இவர்கள் கல்கிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
தான நிகழ்வில் ஒன்றில் கலந்து கொண்ட சகோதரன், தனது சகோதரியை கல்கிஸ்ஸ, மாளிகாவத்தை வீதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.