நல்லிணக்கம் ஏற்படுமென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடு : கருணாகரம் ஜனா சாடல்
ஆட்சியாளர்களின் அதிகாரப் பசியால் நம் நாட்டின் பாரம்பரியத்தை காலில் போட்டு மிதியாது அரசியலமைப்பினை முறையாக நடைமுறைப்படுத்துவதே நாட்டில் உண்மையும், நல்லிணக்கமும் ஐக்கியமும் ஏற்படுவதற்கு மார்க்கம் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
மேலும், ஆணைக்குழுச் சட்டம் மூலம் இவற்றினை ஏற்படுத்துவதென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடே எனவும் சாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.01.2024) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பேருண்மை
சட்டமூலமொறினால் நாட்டில் உண்மை, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படும் என்ற “மாதனமுத்தா” சிந்தனையின் வெளிப்பாடே இச் சட்டமூலம் என நான் கருதுகின்றேன்.
மந்திரத்தால் மாங்காய் வீழ்த்துவது எவ்வளவு சாத்தியமோ அவ்வாறே இச் சட்டமூலத்தால் நம் நாட்டில் உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் ஏற்படும் என்று கருதும் செயற்பாடுமாகும். குறித்த சட்டமூலத்தின் முன்னுரையினை கவனமாக நோக்குவோமானால் ஒரு பேருண்மையொன்றினை நாம்புரிந்து கொள்ள முடியும்.
1978ஆம் ஆண்டு எம்மால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் உறுப்புரைகள் குறிப்பாக மக்களது அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதித்துறைச் சுதந்திரம், சுயாதீனத்தன்மை, சட்டத்தின் முன் யாவரும் சமமான தன்மைகள் இதுவரை முறையாக பேணப்படவில்லை என்ற உண்மையினை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
இச்சட்டமூலம் எமது அரசியலமைப்பின் உறுப்புரைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறது.
சட்டத்தின் முன் சமம்
நமது நாட்டில் சட்டத்தின் முன் சமம் என்பது நடைமுறையிலுள்ளதா என்பதற்கு சிறிய உதாரணம், இன நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கும், மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும், நில ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும், காரணமானவர்கள் யார்? அண்மைக்காலமாக இத்தகைய நடவடிக்கைகளில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸார்,
எமது நாடு பாரம்பரிய பல்லினத்தன்மை கொண்ட நாடு. பல்லினத்தன்மையை மதித்த ஒரு நாடு. உலகத்தின் எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு அனைத்து மதக்குழுவினரும் ஒரே இடத்தில் தத்தமது மத வழிபாட்டினை அனுஷ்டிக்கும் பழம் பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது எமது நாடு, சிவளொளிபாதம், கதிர்காமம் போன்ற புண்ணிய நிலங்கள் இதற்குத் தக்க உதாரணங்களாகும்.
கடந்த வாரம் ஜனாதிபதி வடமாகாண விஜயத்தின் போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோமானால் பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற்றம் அடையும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இங்கு மதங்களுக்கிடையே நல்லிணக்கம் உருவாகத் தேவையில்லை. இனங்களுக்கிடையிலேயே நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும்.
காணி அபகரிப்பு
இன்றும் கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இருபது முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியற் கைதிகளாக இருப்பவர்கள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.
காணி அபகரிப்பு வடக்கு கிழக்கிலே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மயிலத்தமடு மாதவணை போன்ற பிரதேசங்களிலே பண்ணையாளர்கள் அடித்து விரப்பட்டு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், பண்ணையாளர்கள் மாடுகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலைமைகளில் எவ்வாறு இன நல்லிணக்கம் ஏற்படும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை குறைந்தது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போதாவது வைத்தால் செலவுகளையும் குறைக்கலாம் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்றும் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
