மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள்
பதுளை - பண்டாரவளை வீதியின் உடுவரை 7ம் கட்டை பகுதியில் மனித எலும்புகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளமை இன்று (11.01.2024) அவதானிக்கப்பட்டுள்ளது.
வீதியில் இருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் போது இந்த எலும்புகள் காணப்பட்டதை அடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ஹாலிஎல பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மண்சரிவு எற்பட்ட பகுதி மயானம் எனவும், புதைக்கப்பட்ட சடலத்தின் எலும்பு துண்டுகளே இவ்வாறு மண்சரிவில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தன் பின்னர் எச்சங்களை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
