யாழில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவருக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அச்சுறுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது நேற்று(24.07.2024) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம்
கடந்த சனிக்கிழமை (20) நள்ளிரவு தமது வீட்டிற்க்குள் நுழைந்த தம்மை போதை தடுப்பு பொலிஸார் என அறிமுகம் செய்து தந்தை மற்றும் மகனை கை விலங்கிட்டு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் நான்காவது தடவையாக இடம் பெற்றுள்ளதாகவும் தனது மகன் தொடர்ந்து கல்வி கற்பதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம்(25) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 23 மணி நேரம் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri
