கொழும்பில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு
கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஒருகொடவத்தை, சேதவத்தை பகுதியில் இருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவலின் அடிப்படையில் இன்று குறித்த சடலம் மீட்டக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
சடலத்தின் தலையில் அடிகாயங்கள் இருப்பதால் மேற்படி ஆண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
45 வயதான ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என்று பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |