இரகசிய தகவல் வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து தாக்குதல்! பின்னணியில் மிகப்பெரும் சதி - நீதி அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்திற்கு திட்டமிட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே காரணம் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மோதலில் 19 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றதத்தில் இன்று (07.07.2026) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக் குழுக்களின் சதி
அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மை நிலையை கண்டறிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதல்களில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றக் குழுக்களின் சதி உள்ளது.
சிறைச்சாலை நிர்வாகத்திற்கு இரகசியத் தகவல்களை வழங்கிய கைதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது ஒரு பாரதூரமான மனிதப் பேரவலம். சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக நாம் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தோம்.

பல பொருட்களுக்கு சேதம்
நிர்வாகத்திற்குத் தகவல் வழங்கிய கைதிகளே முதலில் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையின் போது, திட்டமிட்ட முறையில் பல மில்லியன் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை அடியோடு முடக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்துள்ளது
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் ஆகியன தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசரக் கலந்துரையாடல் ஒன்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
you may like this video
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri