கிளிநொச்சியில் படகுகள் மோதுண்டு விபத்து: ஏழு பேர் காயம்
கிளிநொச்சி - பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (02.03.2024) இடம்பெற்றுள்ளது.
தவக்கால திருவிழா
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று நடைப்பெற்றது.
இதற்காக பெருமளவான பக்தர்கள் தமது படகுகளில் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது சென்ற இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் காயமடைந்த எழு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |