யாழில் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்(Photo)
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை காலை 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய பேரணி ஆரம்பமாகவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்று (03.02.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழில் பேரணி செல்லும் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை காலை வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஹர்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்புக்களும் ஆதரவு
இதற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில், நாளை பல்கலைக்கழக மாணவர்கள் பேரெழுச்சியாக தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இதே நிலையில் தமது வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடியினை கட்டி அனைத்து தரப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam