யாழில் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்(Photo)
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை காலை 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டகளப்பு நோக்கிய பேரணி ஆரம்பமாகவுள்ளது.
அதனை முன்னிட்டு இன்று (03.02.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழில் பேரணி செல்லும் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை காலை வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோர், திரையரங்குகள் உட்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஹர்தால் குறித்த அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்புக்களும் ஆதரவு
இதற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு நல்கியுள்ள நிலையில், நாளை பல்கலைக்கழக மாணவர்கள் பேரெழுச்சியாக தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இதே நிலையில் தமது வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கறுப்பு கொடியினை கட்டி அனைத்து தரப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிவில் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
