மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 ஆவது நினைவேந்தல்
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (28.01.2024) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டது.
சுட்டுப் படுகொலை
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டதன் 37 ஆவது நினைவு தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெல்லாவெளி அமைப்பாளர் குமாரசிங்கம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நினைவு தூபியில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
