கோட்டாபாயவுடன் மோசடி வழக்கில் சிக்கிய முன்னணி பாடகர்கள்

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Law and Order
By Dharu Jun 07, 2025 08:37 AM GMT
Report

‘வெராஸ் நதி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் செலவிடப்பட்டதாக  கூறப்படும் வழக்கில் இலங்கையின் முன்னணி பாடகர்களான பாத்தியா மற்றும் சந்தோஷை சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் விடயத்தை கூறியுள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு  27.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம்

லிஃப்ட் இயக்குபவரை தாக்க முயன்ற பூஜித! நீதிமன்றுக்கு வழங்கியுள்ள வாக்குமூலம்

கோட்டாபய ராஜபக்ச

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்துள்ளதாகவும், மேலும் நகர மேம்பாட்டு ஆணையம் அவரது கீழ் இருந்தது என்றும் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோட்டாபாயவுடன் மோசடி வழக்கில் சிக்கிய முன்னணி பாடகர்கள் | Bathiya Santhush In The Fraud Case With Gotabaya

இந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட எம்.ஏ. ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதிரவின் சார்பாக சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன நீதிமன்றத்தில் முன்னிலையாகி மேற்கண்ட விடயங்களை முன்வைத்துள்ளார்.

வெராஸ் நதி திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்கு முறையான திட்டமிடல் செயல்முறையைப் பின்பற்றாமல் அரசாங்க நிதியை செலவிட்டதற்காக, காணி மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது மேலாளர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

வெராஸ்நதி திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை என்றாலும், கொள்முதல் செயல்முறை இல்லாமல் திட்டத்திற்கு 2.76 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் உதவி சட்ட இயக்குநர் சட்டத்தரணி சுலோச்சனா ஹெட்டி ஆராச்சி ஆதாரங்களை நீதிமன்றுக்கு முன்வைத்துள்ளார்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பரிதாப நிலை - விகாரைகள், ஆலயங்களில் தஞ்சம்

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பரிதாப நிலை - விகாரைகள், ஆலயங்களில் தஞ்சம்

பாத்தியா மற்றும் சந்தோஷ் 

இந்நிலையில், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக நிறுவனத்தின் இரண்டு முன்னாள் பொது மேலாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியதன் பின்னர், தனது கட்சிக்காரர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும், சட்டத்தரணி நுவான் ஜெயவர்தன நீதிமன்றத்திற்கு இதன்போது தெரிவித்திருந்தார்.

கோட்டாபாயவுடன் மோசடி வழக்கில் சிக்கிய முன்னணி பாடகர்கள் | Bathiya Santhush In The Fraud Case With Gotabaya

இந்த திட்டம் செப்டம்பர் 9, 2014 அன்று திறக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ள 2014 செப்டம்பர் 5 ஆம் திகதி கொள்முதல் செயல்முறையின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த  கோட்டாபய ராஜபக்ச திட்டத்தைப் பார்ப்பதற்காக ஒத்திகைகளை கூட நடத்தியதாகவும், அத்தகைய சூழ்நிலையில் தனது கட்சிக்காரர் மிகுந்த அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாகவும் நுவான் ஜெயவர்தன கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் பாத்தியா மற்றும் சந்தோஷ் பயணடைந்தார்கள் எனவும் அறிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழி தொடர்பில் அநுர அரசு வழங்கியுள்ள உறுதி

செம்மணிப் புதைகுழி தொடர்பில் அநுர அரசு வழங்கியுள்ள உறுதி

அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்ட ஜெயந்த ஜெயசூரிய

அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்ட ஜெயந்த ஜெயசூரிய

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US