எதிர்க்கட்சிகள் நிறுவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை : பிமல் பகிரங்கம்
சூழ்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர்க்கட்சிகளினால் நிறுவப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாது என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.
வேறு விடயங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து
ஊழல் மோசடிகளை மேற்கொள்வோரினால் ஆட்சி செய்யப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கத்திற்கு எவ்வித அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை நிறுவுவதற்கு மக்கள் ஆணையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு சிறு சிறு குழுக்கள் ஒன்றிணைந்து ஆட்சியை அமைப்பது ஜனநாயக விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் மேயராக ட்ரோய் பல்தாசர் நியமிக்கப்படுவார் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
