14 வயது சிறுமியை திருமணம் செய்ய அழைத்துச் சென்ற இளைஞன்: பொலிஸார் எடுத்த நடவடிக்கை
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்ற இளைஞன் தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா, சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலை
மாணவியை நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காதலித்து திருமணம்
செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த இளைஞர் சிறுமியை நேற்று(26) குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இருவரையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதைடுத்து இளைஞனை
தாக்கியுள்ளனர்.
இதேவேளை பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞரை கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக கொண்டு சென்ற போது இளைஞருக்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 14 வயது சிறுமியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் இளைஞரை கைது செய்து பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
