பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்து பெண்
பாகிஸ்தான் நாடளுமன்ற பொதுத்தேர்தலில் முதல் முறையாக இந்துப்பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் 16 ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண்
இதனூடாக பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப்பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ் பெற்றுள்ளார்.

அதேவேளை கடந்த 2022ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற சவீரா, தனது படிப்பை முடித்தவுடன் அரசியல் களத்தில் நுழைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை. எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri