கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! இருதரப்பும் மருத்துவமனையில் அனுமதி
கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க.உறுப்பினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருதரப்பும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம்
கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க. உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள உளுவடுகே சந்தமாலி என்பவர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் வரவேற்பு மண்டபத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்த தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், தனது தலைமுடியைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி, தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருதரப்பும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
