மட்டக்களப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதி
மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் இன்று (22) சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சர்களிடம் கோரிக்கை
விவசாய நடவடிக்கைகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகள் மற்றும் சவால்களை எடுத்து விளக்கிய விவசாயிகள், இவற்றை நிவர்த்திக்க அவசர முயற்சிகளை செய்யுமாறு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்சினை
விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாலாயிரம் தொன் பசளையை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபரில் செய்கை செய்யவுள்ள பெரும்போக செய்கைகளுக்கு இந்த பசளைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

மேலும், உரிய வேளைக்கான நீர்ப்பாசனம், கால்நடையாளர்களால் உரிமை கோரப்படும் மேய்ச்சல் தரை போன்ற விடயங்களுக்கு இருதரப்பினருடனும் கலந்துரையாடி முடிவெடுப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ,
பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார
ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam